Friday, August 17, 2007

ஆகஸ்ட் 15..

அன்று
எதையோ எவரிடமோ இழந்து
பலவற்றையும் பலரையும் இழந்து
தலைவர்களைப் பெற்றோம்..

இழ‌ந்ததின் மதிப்பும்  பெற்றதின் மதிப்பும் உணராமல்
மீண்டும் ஒரு ஆகஸ்ட் 15..

இன்று
நம்மையே நம்மிடம் இழந்து
என்னதொலைத்தோம் எங்கு தொலைத்தோம்
என குழம்பிக் கொண்டே..

நாளைகளின் நிறங்கள் மாறும்
எனும் நம்பிக்கையோடு
மூவர்ணக்  கொடிக்குத் தலை வணங்க‌
மீண்டும் ஒரு தினம்....

வாழ்த்துக்கள்....

No comments: