Monday, January 14, 2013

பொங்க‌ல் ...

அரசியல் பூமியில்
காவிரியால் பொங்குது தினம் தினம் அறிக்கை வெள்ளம்
 ஊராட்சி, நாடாளுமன்றம், சட்டமன்றம் முப்போகமும் நடக்குது வாக்கு அறுவடை..

விவசாய பூமியில்
வானம் வெறித்து தினம் தினம் கண்ணீர் வெள்ளம்
மின்னலாய் நீளும் விரிசல் பூமியால்
 காளான் முளைக்குது அடுப்பங் கரையில்..

காவிரி போகிக்கு செல்லும் முன்
புத்தாடையாய் முல்லைப் பெரியாறு..


முப்போக‌ம் போயினும் ஒருபோக‌ம் தந்த
விண்ணுக்கும் ம‌ண்ணுக்கும் உள்ள‌ம் பொங்க
பொங்க‌லிடும் விவசாயிக்கு த‌லை வ‌ண‌ங்கி..

கவலைகள் தொலைத்து
க‌ட‌மைக‌ள் புரிந்து
உற‌வுக‌ள் வ‌ள‌ர்த்து
உள்ள‌ம் பொங்க‌  வாழ
வாழ்த்துக்க‌ள்!!!!!!!!!!!!

No comments: